அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

மழை - என் பார்வையில்...! 12/02/2008


மழை - பொதுவாக எல்லோருக்கும் பிடித்த சீதோஷ்ண நிலை. மழை என்றவுடனே எனக்கு நினைவுக்கு வருவதன்னவோ சுறுசுறுப்பு தான். மழை பெய்ய ஆரம்பிக்கும்போது, நெல்லை அள்ளி குவிப்பதிலாகட்டும், ஆடு/மாடுகளை கட்டுவதிலாகட்டும், குழந்தைகளை தேடுவதிலாகட்டும், புதிதாக நட்ட நாற்றுகள் பிறழாமல் இருக்க தண்ணீர் பாய்ச்சுவதிலாகட்டும், மக்களிடையே ஒரு தனி பரபரப்பை ஏற்படுத்திவிடும் இந்த மழை. அப்படி சுறுசுறுப்பு இல்லாத சோம்பேறிகளை “எருமை மாட்டுல மழை பெய்த”  மாதிரி நடக்குறான் பாரு-னு சொல்லி கிண்டல் செய்வது வழக்கம். அதனால் மழையை சுறுசுறுப்பின் வினையூக்கியாகவே பார்க்கிறேன்.

மழையையும் கடலையும் ( பெண்ணையும் :) தான் ) வர்ணிக்காத எழுத்தாளனோ கவிஞனோ இருக்கவே முடியாது. இது ஒட்டுமொத்த உலகத்துக்கே பொதுவான ஓர் அம்சம். அப்படி இருக்கையில் நான் மட்டும் விதியை மீற முடியுமா என்ன? 

ஒரே மழை, பெய்யும் இடம் மற்றும் நேரத்தை பொருத்து வெவ்வேறு பயனையும் பாதிப்பையும் தருகிறது. கிராமத்தில் இருந்தபோது, மழை எப்போது பெய்தாலும் எல்லொருக்கும் ஒரே விதமான விளைவு தான் இருக்கும், ஏனென்றால், எல்லோருக்கும் பொதுவான தொழில் விவசாயம் தான், ஒருவருக்கு பாதிப்பு என்றால் அது அனைவருக்குமே பொருந்தும். ஒரு விதமான ஒற்றுமை இருந்த்தது. அறுவடை சமயம் தவிர மற்ற நேரங்களில் வருகிற எல்லா மழையுமே எங்களுக்கு பயன் தரக்கூடியதே, இவ்விஷயத்தில் விவசாயிகளின் உற்ற தோழனாகவே மழையை நான் பார்க்கிறேன்.

என் கிராமத்து வாழ்க்கையில் மழை என்றுமே எனக்கு மிகவும் பயனுள்ளதாகவும்/ சந்தோசம் தரக்கூடியாதாகவும் தான் இருந்திருக்கின்றது. மழை பெய்தால், சீக்கிரம் பள்ளியில் இருந்து கிளம்பிடலாம் ( எங்கள் அளவீடு விளையாட்டு மைதானம் தான், விளையாட்டு மைதானத்திற்குள் தண்ணீர் நிரம்பினால் விடுமுறை தான்) , மறுநாள் மீன்பிடிக்க, ஈசல் பிடிக்க, காளான் மற்றும் கீரை பிடுங்க, ஆற்றுக்கு குளிக்க - இப்படி பலவகையான சந்தோஷங்களுக்கு மழை காரணமாக இருந்திருக்கின்றது.

மழையின் போது வெளிவரும் அந்த மண்ணின் மணம்,  நுகர்ந்து அனுபவிக்க வேண்டிய ஒரு சுவாசம் - ஒரு கோடி இன்பம். தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக சுத்தமான ஒன்றாக நான் கருதுவது மழைநீர் மட்டுமே. இதை விட சந்தோசமான விஷயம் வேறென்ன வேண்டும். இயற்கை அன்னை நம் வீட்டிற்கு அனுப்பி வைக்கும் விருந்தினராகத்தான் நான் மழையை பார்க்கிறேன்.  

கோடை காலங்களில் மழை பெய்த மறுநாள் காலை நிலமானது பிறந்த குழந்தையின் பஞ்சு விரல்களைப் போன்றோரு மென்மையாய் இருக்கும். மழைக்காலங்களில் தட்டான், ஈசல், வண்ணத்துப்பூச்சி, ரயில் பூச்சி (உண்மையான பெயர் என்னனு தெரியல), நத்தை, தண்ணீர் பாம்பு உட்பட பல ஜீவராசிகளை தரிசிக்கலாம். மழைநீர் தான் ஒரே நாளில் இத்தனை ஜீவராசிகளாக உருமாறியதோ! போன்ற எண்ணத்தை எனக்கு ஏற்படுத்த தவறவில்லை. மழையை ஒட்டுமொத்த ஜீவராசிகளின் ஒரே தாயாக பார்க்கிறேன்.

தண்ணீர் எப்படி தானிருக்கும் பாத்திரத்தின் வடிவத்தையும் வண்ணத்தையும் பெறுகிறதோ, அதே தன்மை மழைக்கும் உண்டு, அதுமட்டுமல்லாமல் மழையால் நம் உள்மன உணர்வுகளை மிகைப்படுத்த முடியும். ஒரு சந்தோசமான பாடலையும், ஒரு சோகமான மரண நிகழ்வையும் – மழையுடன் இணைக்கும் போது அதன் வலிமை அதிகமாவது மறுக்கமுடியாத ஒரு உண்மை. 

வழக்கமாக அணை/ஆற்றிலிருந்து பாயும் வெள்ளத்திற்கும், மழையினால் பாயும் வெள்ளத்திற்கும் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒரு வேற்றுமை உண்டு. மழை வெள்ளத்தில் ஒரு வீரியமும்/வசீகரமும் கொஞ்சம் அதிகமாகவே இருப்பதாக உணர்ந்திருக்கின்றேன், அதன் அலை வடிவமும் வித்தியாசமானதா இருப்பதாகவே நான் உணர்ந்திருக்கின்றேன், அதனால் தான் மழை வெள்ளம் ஓடுவதை பார்த்துகொண்டே இருந்தால், நேரம் போவதே தெரியாது. எங்கள் வீட்டு முன் இரண்டு தெருவின் மழைநீரும் ஒன்றாக சேர்ந்து ஒரே வெள்ளமாக செல்லும், மழை பெய்யும் போதும்/பெய்த பிறகும் பார்க்க பார்க்க அலுக்காத ஒரு அற்புதமான இயற்பியல் நிகழ்வு அது, காணக்கிடைக்காத கண்கொள்ளா காட்சி. இது மிகைப்படுத்தப்படாத உண்மை.

இப்படி பல வகைகளில் மக்களுக்கு பயன் தரக்கூடிய இந்த மழை செல்வத்தை நான் மிகவும் நேசிப்பதால்தான் என் தங்கை மகளுக்கு வர்ஷா (மழை) என்று பெயரிட்டேன். இந்த இயற்கையின் வரப்பிரசாதத்தை சரியான முறையில் சேமித்துக் கையாளாததால் தான் இன்று பலவிதமான தொல்லைகளை அனுபவித்து வருகிறோம்.

மழைநீரை சேமிப்போம். மகத்தான வாழ்வை அடைவோம்.

தொடர்புள்ள பதிவு : மழை - அரசியல்

7 பின்னூட்டங்கள்:

Anonymous said...
சும்மா மழையில நனங்சிட்டேன்.......TICKET இல்லாம செண்ணை போய் மழைய feel பன்னின ஒரு உணர்வு..... நல்ல பதிவு......வாழ்துக்கள்.

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
VG said...
malaiku pinnal ivalu periya vishyangal irukka.... anubuvangal varitagalil vanthu vilurthu telivaga terigirathu...


malai yendral enn ninaivugalluku varutu, ennoda bed, bolster and blanket... semma jaaly uh toongalam.. athuve exam naal na.. enaku malai virothi. :P

jannal ooram amarnthu malai saaralai rasikka pidikum, aanal malaiyil naiya pidikathu..

malai nerathil coffee pudikum, kudaiyum pudikum...


aaha.. vittaka nan innoru article elutiduven pole.. ithoda niruthi kolgiren.. :)

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

to அறிவு,
நன்றி! தங்களது ஆக்கத்துக்கும் ஊக்கத்துக்கும்.

to Viji,
//
aanal malaiyil naiya pidikathu..
//
enakku malai peyyum pothu kinathil/aatril kulikka pidikkum.

//
malai nerathil coffee pudikum
//
the same lyric is there in "Perunthil nee enakku Jannal oram song"


//
aaha.. vittaka nan innoru article elutiduven pole..
//
There you are ....


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
சென்ஷி said...
ரொம்ப நல்லா இருக்குதுங்க.. மனசுல மழை வாசனை எனக்கும் அடிக்குது. :)))

------------- ~~~~~ Thanks to சென்ஷி ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//ரொம்ப நல்லா இருக்குதுங்க.. மனசுல மழை வாசனை எனக்கும் அடிக்குது. :)))
//
மிக்க சந்தோசம்.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
அன்புடன் அருணா said...
மழை எங்கெல்லாமோ அங்கெல்லாம் மோப்பம் பிடித்து வந்துவிடுவேன்...அவ்வ்ளோ ப்இடிக்கும் எனக்கு மழை....நல்லாருந்தது பதிவு.
அன்புடன் அருணா

------------- ~~~~~ Thanks to அன்புடன் அருணா ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அருணா அவர்களே!


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------