அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

Little Women - ஒரு பார்வை. 12/03/2008


வட அமெரிக்காவின் வட கிழக்கு மாநிலத்தில் (Massachusetts) உள்ள Concord –ல் நான்கு பெண்களைக்(Meg, Jo, Beth and Amy) கொண்ட குடும்பத்தின் கதை. எழுத்தாளாராக வரும் கதையின் நாயகியின்(Jo) பார்வையில் விரிகிறது கதை.  

இந்த நான்கு சகோதரிகளின் சின்ன சின்ன பனித்துளி போன்ற வாழ்வியல் நிகழ்வுகளை ஒன்றாக சேர்த்து உருவான ஒரு தெளிந்த நீரோடையைப் போல் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது புதினத்தை அடிப்படையாக கொண்ட இந்த படம். 

நான்கு பெண்களும் தங்களுக்கென ஒரு தனித்திறமையுடன் இருக்கிறார்கள். மூத்தவள்(Meg) பொறுப்பான/அன்பான/இரக்கமுள்ள பெண்ணாக வருகிறாள், இளையவள்(Beth) Piano   வாசிப்பதில் கெட்டிக்காரி. கடைக்குட்டிக்கு(Amy) ஓவியத்தின் மேல் தீவிர காதல்.

இது கிட்ட தட்ட Sense and Sensibility  ( இந்த படத்தின் தமிழாக்கம் தான் கண்டுகொண்டேன்.. கண்டுகொண்டேன்..),  Price & Prejudice  படங்களை போல நகைச்சுவை/காதல் கலந்த குடும்ப்படம். Batman Begins, Dark Knight (முதன் முதலில் IMAX-திரையரங்கில் பார்த்து வியந்த படம்), Prestige and The Machinist போன்ற படங்களை பார்த்த பிறகு, Christian Bale நடித்த படங்களை தேடிப்பிடித்து பார்க்கும் போது கிடைத்ததுதான் இந்த Little Women. ஆனால் கதாநாயகி Winona Ryder  (Jo)  தனது அருமையான நவரச நடிப்பினால் மற்ற அனைவரையும் பின்னே தள்ளிவிடுகிறாள். அதற்கான வாய்ப்பை கதை அவருக்கு ஏற்படுத்தி தந்திருந்தது.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்;  கேலி, கிண்டல் என்று நான்கு சகோதரிகளின் சந்தோசத்தில் ஆரம்பிக்கிறது படம். அவர்களின் வாழ்வில் சின்ன சின்ன சறுக்கல்கள், கோபங்கள், வருத்தங்கள், இழப்புகள் இருந்தாலும், ஆரம்பம் முதல் இறுதி வரை முழுவதும் இழையோடும் நகைச்சுவையும், Winona Ryder  வின் அழகான நடிப்பும் இப்படத்தின் அம்சம்.

எழுத்தாளர் எஸ்.இராமகிருஷ்ணன் புத்தகம் செல்லும் திசை எனும் பதிவில் தன் புத்தகங்களை இழக்கும்போது அடையும் வருத்தத்தை மிக நேர்த்தியாக எழுதியிருப்பார். அது ஏற்படுத்திய பாதிப்பை- Jo தான் எழுதிய புத்தகங்கள் தீயில் எரிவதைக் கண்டு பதறி/தவித்து அழுகின்ற காட்சி ஏற்படுத்தியது.

பக்கத்து வீட்டு பையனுடன் Christian Bale (Laurie) விளையாட்டு/நாடகம் நடித்தல் என்று நட்புடன் பழக ஆரம்பிக்கிறாள் Jo.  தன் சகோதரியின்(Meg) கல்யாணத்திற்கு பிறகு, நண்பனாக பழகிய Laurie அவளிடம் தன் காதலை வெளிப்படுத்த, ”நாம் இருவரும் நல்ல நண்பர்கள் தான், என்னால் உனக்கு மனைவியாக முடியாது” என்று வருத்தத்துடன் மறுக்கிறாள் Jo. இதனால் ஏற்படும் மன உளச்சலை தவிர்க்க, எங்கேயாவது சென்று விடலாம் என்று நினைக்கிறாள். ஆனால் அவளுக்கு பிடித்த ஐரோப்பா-விற்கு அவளுக்குப் பதிலாக தங்கையை(Amy)-ஐ அழைத்து செல்கிறாள் அவளது அத்தை.

வேறு வழியின்றி வாழ்வில் ஒரு மாற்றத்தை விரும்பி வேலைக்காக மக்கள் நெருக்கடி மிகுந்த நியுயார்க் செல்கிறாள். அங்கே ஜெர்மனியை சேர்ந்த ஆசிரியரை (Friedrich ) சந்திக்கிறார், இருவரின் முதல் சந்திப்பு ஒரு அருமையான காட்சி.

ஒருவரை ஒருவர் யாரென்று தெரியாததில் ஆரம்பித்து ஒருவரை ஒருவர் நன்றாக புரிந்து கொள்வதில் முடிகிறது அக்காட்சி. “Reading a good book is like being home again” – ஏக்கம் கலந்த பெருமூச்சுடன் சொல்லும் போது எழுத்தின் மீது அவருக்கும் இருக்கும் ஆர்வத்தையும், வீட்டை விட்டு பிரிந்திருப்பதின் துயரத்தையும் ஒரு சேர மிக அழகாக வெளிப்படுத்தியிருப்பாள் அந்த காட்சியில்.

இருவரும் ஒரே அலைவரிசையில் பயணிப்பதால் காதல் கொள்கிறார்கள். Friedrich  - மேல் உள்ள பாசத்தை/காதலை அவன் கொடுத்த ஆரஞ்சுபழத்தை ரசித்து சுவைத்து சாப்பிடுவதின் மூலம் Jo வெளிப்படுத்தியிருப்பது ஒரு கூடை கவிதை. 

இதனிடையே தன்னுடைய கதைகளை பிரசுரிக்கவும் முயற்சி எடுக்கிறாள். இவரின் படைப்புகள் Sentimental/Fairy tales கதைகளாக இருப்பதாகக்கூறி, பிரசுரிக்க மறுக்கிறார்கள். இதனால் மக்கள் விரும்பும் திகில், குற்றங்கள் நிறைந்த கதைகள் எழுத ஆரம்பிக்கிறாள். ஆனால் அந்த கதைகளில் அவளின் உள்ளுணர்வையும் தனித்தன்மையையும் காண முடியாத்த்தால் வருத்தம் கொள்கிறார் Friedrich . கதைகளை புனையாதே உன் வாழ்க்கையிலிருந்து/அடிமனதிலிருந்து எடு என்று அறிவுறுத்துகிறார், இதனால் இருவருக்கும் சிறு மனக்கசப்பு ஏற்படுகிறது. 

அதே சமயம் தன் தங்கை(Beth)யின் உடல்நிலை சரியில்லதாதால் அவரை பிரிந்து வீடு செல்கிறாள். அங்கே சுகமில்லாத தங்கைக்கு கதைகள் சொல்லி தெம்பூட்டுகிறாள், அவளும் துரதிர்ஷ்டவசமாக இறந்துவிட தனிமை இவளை ஆட்கொள்கிறது. 

ஒருநாள் தங்கையின்(Beth) பெட்டியை திறந்து பார்க்கும் போது, அவள் சேகரித்து வைத்திருக்கும் சிறு வயதில் பயன்படுத்திய பொருட்களை கண்டு வியப்படைகிறாள். இந்த தனிமையை பயன்படுத்தி தனது வாழ்க்கை அனுபவங்களை ஒன்றாக புனைந்து ஒரு புதினம் எழுதி அதை Friedrich -க்கு அனுப்பி வைக்கிறார். இதற்கிடையில் Laurie –க்கு தனது தனிமை குறித்து கடிதம் எழுதி அவனை வரவைக்கிறாள். அவனும் ஒரு இன்ப அதிர்ச்சியான செய்தியோடு Jo-வை சந்திக்கிறான்.

மூத்த சகோதரி இரட்டை குழந்தைகளுக்கு தாயாகி சந்தோஷமாக இருக்கிறாள். கடைக்குட்டியும் திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்க தயாராகிறாள். இவள் மட்டும் வாழ்வில் அடுத்த் நிலையை அடையாமல் இருக்கிறாள். தனது அத்தை விட்டு சென்ற வீட்டை வைத்து பள்ளிக்கூடம் நட்த்தலாம் என்றிருக்கிறாள். 

அடுத்து அடிக்கிறது வசந்தகாலம் அவளின் வாழ்க்கையில்,”ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல ,  பாருங்கள் இந்த 4 நிமிட இறுதி காட்சியில் அவரது நடிப்பையும் இயற்கை அழகையும்.


நான் என்னுடைய முந்தைய பதிவில் கூறியது போல், இருவரும் தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளும் போது, மழையை இணைத்து, அந்த காதல் காட்சியின் உணர்வை மிகைபடுத்தியிருப்பது மிகவும் அருமை.

பார்ட்டியில் தன்னை வெறித்து பார்ப்பவனிடமிருந்து தப்பிப்பது/சகோதரியின் முடியை கருக்கி விட்டு வருந்துவது/தங்கையை அடித்த ஆசிரியரின் மீது கோபம் கொள்வது/ Laurie-ஐ தங்கள் விளையாட்டில் சேர்த்துக்கொள்ள பரிந்துரை செய்வது/ தன்னை எழுத்தாளாராக காட்டிக் கொடுத்த கையில் இருக்கும் மையை (INK) எச்சிலால் தொட்டு அழிப்பது/ ஒருவித தயக்கம் கலந்த வெக்கத்துடன் Friedrich  தந்த காஃபியை அருந்துவது /Opera நிகழ்ச்சியின் போது முத்தமிடும்போது ஏற்படும் இடையூறின் போது காட்டும் நாணம், அதை தொடர்ந்து முத்தம் – என ஒரு வண்ணத்துப்பூச்சி சிறகடித்து பறப்பது போன்ற ஒரு துள்ளலான நடிப்பினால் ஆங்காங்கே தன்க்கெனெ ஒரு தனி முத்திரையை பதித்திருப்பாள், அதனால் சிறந்த நடிகைக்கான OSCAR விருதுக்காக பரிந்துரையும் செய்யப்பட்டாள்.

படத்தில் எனக்கு பிடித்த சில முத்தான வசனங்கள்:

Jo, எனக்கு எதுவும் எழுத முடியலியே என வருந்தும் தங்கை(Beth)யிடம், First rule of writing is, never write what do you know?

”You only need one, if he is the right one”  - முடி கருகியதால் தன்னை யாரும் பார்ட்டியில் கவனிக்க மாட்டார்களே என்று வருந்தும் Meg-டம் கடைக்குட்டி(Amy).

Jo  தனது கதையை விவரிக்கும் போது, Late at night, my mind would come alive with voices and stories and friends as dear to me as any in the real world. I gave myself up to it, longing for transformation. 

Friedrich -டம் தனது முதல் சந்திப்பில் Jo, Some books are so..... familiar. Reading them is like being home again.

மரணப்படுக்கையில் இருக்கும் Beth, Jo விடம் I love being home. But I don't like being left behind. Now I am the one going ahead

இறுதிகாட்சியில், 

Friedrich  அவளது புதினத்தைப் பற்றி, “Reading your book is like opening a window into your heart”

Friedrich  தயக்கத்துடன் Will you have me, பதிலுக்கு Jo முழு சந்தோசத்துடன் with all of my heart..

இதனைத் தொடர்ந்து 1993-ல் Martin Scorsese இயக்கத்தில் Daniel Day-Lewis -வுடன்( “The Unbearable Lightness of Being” -  படத்தில் இவருடைய “Take off your cloths” வசனம் மிக பிரபலம் ) நடித்த Age of Innocence பார்க்கலாம் என்றிருக்கிறேன்.


4 பின்னூட்டங்கள்:

சென்ஷி said...
அருமையான பட விமர்சனம். மிக நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள்.. கண்டிப்பாக பார்க்க வேண்டும் என்ற ஆவல் தூண்டுகிறது...

//இந்த நான்கு சகோதரிகளின் சின்ன சின்ன பனித்துளி போன்ற வாழ்வியல் நிகழ்வுகளை ஒன்றாக சேர்த்து உருவான ஒரு தெளிந்த நீரோடையைப் போல் அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை விவரிக்கிறது //

வாழ்க்கை என்பதே சிறு சிறு பனித்துளிகள் சேர்ந்ததுதானே.. மிக சிறந்த ஒப்புமை.. மிக ரசித்தேன்.

//”You only need one, if he is the right one”//

கலக்கல் :))

தொடர்ந்து நிறைய்ய எழுதுங்கள்..

அன்புடன்

சென்ஷி

------------- ~~~~~ Thanks to சென்ஷி ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

கண்டிப்பாக பாருங்கள். மிக அருமையான படம் தான்.

//தொடர்ந்து நிறைய்ய எழுதுங்கள்..//
கண்டிப்பாக.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Karthik said...
rombha arumaiya eludi irukeenga!!! Louisa May Alcott avangaloda novela thaluvi edukka patha padam.. naa 11th padhikum podhu 100% attendance (ada nambunga baasu) edutadugaaga kidacha prize idhu!!! avangaloda chiru vaysau experience vachi eluda patha novel idhu.. avangalukum 3 sisters.... enakku pidicha novel... Podhuvaaga Novelgalai thaluvi edukapadhum padangal, cannot be as original as novel apadingardhu ennoda feeling.. neenga enna ninaikireenga?? Neenga novel padiceengala??? konjam share pannalaame???

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Hi Karthik,

nambitten boss.. I appreciate interest on this.

As you said, it was adopted from Louisa May Alcott's novel only. I didnt read that Novel. After seeing movie, i thought of writing post about that. during my search i found that there are 3 movies and more than 2 TV serials produced based on this.

difference between novel and movie. While reading novel you are free imagine/dream the location/characters on your own. But movie is restricting those thoughts. May be thats the reason movies are not getting much interest from audience. Let me know your thoughts :)


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------