அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

காதலிக்க நேரமில்லை 12/01/2008


காதலிக்க நேரமில்லை - தமிழ் நகைச்சுவைத் திரைப்படங்களில், தனக்கென ஒரு தனியிடத்தை இன்றும் தக்க வைத்துக்கொண்டுள்ள படம். அதே பெயரைக் கொண்ட ஒரு சின்னத்திரை தொடரைப் பற்றிய பதிவு தான் இது. நமது சக பதிவர் ”கனா காணும் காலங்கள்” தொடரைப் பற்றி எழுதியிருந்தார். அவருக்கு நான் எழுதிய பின்னூட்டத்தில் எனக்கு பிடித்த “காதலிக்க நேரமில்லை” தொடரை பற்றி தெரிவித்தேன். அதை தொடர்ந்து இந்த பதிவு.

வெள்ளிக்கிழமை வந்தாலே போதும்,  சின்னத்திரை இயக்குநர்கள், தாய்மார்கள் வயித்துல புளியை கரைச்சுடுவாங்க. “அஞ்சலிக்கு என்னாயிருக்கும்”, “தொல்காப்பியன் தப்பிச்சுடுவார?”, “கஸ்தூரி நிலைமை அவங்க அப்பாவுக்கு தெரிஞ்சிடுமா?” இப்படி பல கேள்விகள் வார இறுதி நாட்கள் முழுவதும் அலை அலையா மனசுல ஓட வச்சுடுவாங்க. 

உதாரணத்துக்கு ஒரு வெள்ளிக்கிழமை இந்த மாதிரி ஒரு காட்சி கண்டிப்பா இடம்பெறும். அப்படியே அந்த பெண் ( கண்டிப்பா கதையின் நாயகியா இருப்பது சிறப்பம்சம்) மரணபயத்தில் வீட்டில் மெதுவா..மெதுவா( நீங்களும் கொஞ்சம் மெதுவா படிங்க) நடந்து வந்து சுமார் ஒரு 15 நிமிடம் நடந்ததுக்கு பின், குளியலறைக் கதவைத் திறந்து,  தாளிட்டு light switch on பண்ணி, திரும்புவாள்....... திரும்பி “ஆ...ஆ.....ஐயோ அம்மா” .... அலறலுடன் அன்றைய எபிசோட் முடிஞ்சுடும்... அப்புறம் திங்கட்கிழமை வந்து பார்த்தா.. அவ ஒரு சின்ன கரப்பான் பூச்சிய பாத்து பயந்து போயிருப்பா... நிறைய வெள்ளிக்கிழமைகள் இப்படி ரத்த களரியோட முடிஞ்சிருக்கு.

சரி விஷயத்துக்கு வருவோம்.. காதலிக்க நேரமில்லை - இப்படி கொடுமைகள் நிறைந்த “சின்னத்திரை தொடர்களில்” சற்று வித்தியாசமாக,  Vijay TV காதலிக்க நேரமில்லை/கனா காணும் காலங்கள்/கலக்க போவது யாரு/காஃபி வித் அனு. கவனிக்க பெரும்பாலான தொடர்கள் “க” வில்ஆரம்பித்தன. இதை ஒரு Sentiment-ஆகவே Vijay TV செய்ததாக கேள்வி. மற்ற தொலைக்காட்சிகளை காட்டிலும், விஜய் தொலைக்காட்சி தனது தொடர்களை பரவலாக்கியது. Sterotype தொலைக்காட்சித் தொடர்கள் குறைய தொடங்கின. இதைப் பார்த்து பயந்து போன சன்,  விஜயின் தொடரை காப்பியடித்தது மட்டுமல்லாமல், கடத்தியும் (அசத்த போவது யாரு) வந்தனர். பணம் பத்தும் செய்யும். என்னத்த சொல்றது.

ஆமா, நான் என்ன சொல்ல வந்தேன்..ம்ம் காதலிக்க நேரமில்லை - என் நண்பர் ஒருத்தர் சொல்லித்தான் இந்த தொடரைப் பற்றி தெரிய வந்தது.  "First Impression is best Impression" - எனக்கு அந்த Title Song ரொம்ப பிடிச்சுப்போச்சு, அதன் பின் அந்த தொடரை youtube-ல தேடி பார்க்க ஆரம்பிச்சேன். எனக்கு TV Serial பற்றி இருந்த எண்ணங்களை தவிடு பொடியாக்கியது அந்த தொடர். அதுக்கு முக்கிய காரணம் கதை களம் - சிங்கப்பூர். நம்ம சிங்கப்பூர். 

நான் வேலைக்காக வெளிநாடு சென்ற முதல் நாடு சிங்கப்பூர். ஆனா எனக்கு ஆரம்பத்தில் அவ்வளவாக பிடிக்கவில்லை. ”கலைஞ்சிருந்தா தான் வீடு.. இல்லேன்னா அது மியுசியம்.” - இப்படி சினேகா டயலாக் விட்டு எங்க ஊரு பெருமை பேசித் திரிந்தேன். வேலை முடிஞ்சு வீட்டுக்கு வந்து “சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா?” பாடலை ஒரு பத்து தடவையாவது கேட்டுட்டு தான் தூங்கிறது. இல்லாத போது தான் அதனோட அருமை தெரியுங்கிறது 100% சரியே. சிங்கப்பூர்ல இருக்கும் போது நம்மூர் சொர்க்கமா தெரிஞ்சுது, இப்போ அமெரிக்கா வந்தபிறகு சிங்கப்பூரும் சொர்க்கமா தெரியுது. இதுதாம்பா உலகம்/வாழ்க்கை.

வந்துட்டேன்..வந்துட்டன்ன்ன்.. காதலிக்க நேரமில்லை - இந்த தொடரின் கதாநாயகி ”சந்திரா லட்சுமணன்” (பெயர் சரிதானா?), இவளோட அந்த ரெண்டு பெரிய்ய்ய கண்கள் தான் எனக்கு ரொம்ப பிடிக்கும். வெக்கப்பட்டு “க்ணுக்”-னு சிரிப்பது பிடிக்கும். இப்படி சொல்லிகிட்டே போகலாம்.. இவளுக்கு ஜோடியா ஒருத்தன் வருவான் பாருங்க கண்டாலே சகிக்காது ( யாருப்பா அது “யோய்”-னு சவுண்டு விடுறது). ப்ரஜன் - அஞ்சலி தொடர்ல இவனோட நெகடிவ் கதாபாத்திரம் இவனுக்கு சரியா பொருந்தியது, அதுக்கு அப்புறம் அதை இரட்டை வேடமா மாத்தி கொடுமை பண்ணிட்டானுங்க. 

சிங்கப்பூரில் உள்ள இடங்களை ஐந்தே நாட்களில் பார்த்து விடலாம், தேக்கா மால், Esplanade Theatre,  Sun Tech, Little India, Orchard Road, Temples, Mustafa , Beach, Sentosa and Zoo. இந்த தொடரிலும் அப்படிதான் ஒரு 30 எபிசோடுக்குள் மொத்த சிங்கப்பூரையும் காட்டிட்டாங்க.  நாங்க சிங்கப்பூரை சுத்தி பார்த்ததும், படையெடுத்தது மலேசியாவுக்குதான். படம் பார்க்க் Johar Bahru-க்கு தான் போறது. 

எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு, ”அந்நியன்” மலேசியாவுலதான் பார்த்தேன், இறுதி காட்சியில விக்ரம் எல்லோரையும் (என்னையும் சேர்த்து தான்)  உக்கார வச்சு (நிக்க வச்சுதானே கேப்பாங்க) கேள்வி மேல கேள்வி கேப்பாரு. அப்போ இந்தியாவை மலேசியா, சிங்கப்பூரோட ஒப்பிட்டு பேசுவாரு.. அதுல “மலேசியா”-னு சொல்லும் போது பின்னாடி இருந்து ஒரே சத்தம்/கூச்சல்/ஆர்ப்பாட்டம்/அலப்பறை..எனக்கு ஒன்னு புரிஞ்சுது நம்ம தமிழன் எந்த அளவுக்கு தமிழை நேசிக்கிறானோ அதே அளவு அவன் வாழ்கிற நாட்டையும் நேசிக்கிறானு.

சரி..சரி.. வர்றேன்.. ம்ம்ம்.. காதலிக்க நேரமில்லை - கதைனு பெரிசா சொல்ல ஒன்னுமில்ல, ஆனா கதையின் போக்கு ரொம்ப யதார்த்தமா ஒரு கவிதையா இருந்தது. ஒருவித மெலிதான உணர்வுடன் கூடிய சின்ன சின்ன கோபங்கள் அதனால் வருகிற ஊடல்கள், பின்னர் கூடும் போது காட்டுகிற பாசம் இப்படி எல்லாத்தையும் அழகா சொல்லியிருந்தாங்க. 

வழக்கமான கொடுமைக்காரன் கணவன்/ தறுதலை மகன், ஒருத்தர் முகத்தையே Slow Motion-ல ரெண்டு நிமிஷத்துக்கு காட்டுறது போன்ற கொடுமை எதுவும் இல்லாதது சிறப்பு. இன்னொரு முக்கியம்சம், நண்பனா வர்ற ஸ்ரீநாத்(?), அவர் பண்ற சேட்டை+எதுகை-மோனை/Timing காமெடி எல்லாம் சரவெடி தான் போங்க. இவருக்கும் பாண்டியராஜன் மாதிரி திருட்டுமுழி. உதாரணத்துக்கு இந்த Clip பாருங்க.  



கிட்டதட்ட ஒரு 50 எபிசோடு பார்த்தேன் அதுக்கு அப்புறம் காலநேரம் சரியா அமையல, நேரம் கிடைக்கும்போது திரும்பவும் ஒரு ரவுண்டு வரணும்.  Title Song - வரியை இந்த பதிவுல போடலாம்-னு இருந்தேன், அதுக்கு அவசியம் இல்லாம் போயிடுச்சு. இந்த லிங்க் அழுத்தி பாடல் வரிகளை பார்த்துக் கொள்ளுங்கள்.

 செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடுமுன் செய்தி அனுப்பு”  என்னே ஒரு அருமையான வரி. நானும் செய்தி அனுப்ப தயார் தான் முகவரி இருந்தா கொடுங்களேன்.

8 பின்னூட்டங்கள்:

VG said...
kaatalikka neram illai nu aarambithu kadaisiyil, sontha katai soga kathai ellam mix panni ungaloda pativin neelathai atigam seitu tingga...

hey thx for the idea. i'm gonna upload a clip too. :))

anyway, ungaloda article padicone sila vishyangal terintu konden.. :))

vazha kanaa kaanum kaalangal.. oops sorry kaathalikka neram illai. :P

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
kaatalikka neram illai nu aarambithu kadaisiyil, sontha katai soga kathai ellam mix panni ungaloda pativin neelathai atigam seitu tingga...
//
actually after writing, I felt it was too long and i spend some more time to TRIM it without affecting main theme :)

//
anyway, ungaloda article padicone sila vishyangal terintu konden.. :))
//
What did you learn?


//vazha kanaa kaanum kaalangal.. oops sorry kaathalikka neram illai. :P
//
kewl


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Silly Village Girl said...
Hey!

I too like this title song very much. But hadnt time to watch the serial

------------- ~~~~~ Thanks to Silly Village Girl ! ~~~~~ -------------
Karthik said...
inda serial Konjam Kadhi aanadaala thookithaanga aalavandhan.. Anda PRAJIn enbavar inda serialil irundu poana udane, directorku enna pannanumnu therila.. adhunala chennai, bombay, call center ella edathulayum suthithu velaikkavadhu nu poitaaru.. VIJAY tv problem idutaanungo!!! Vadivel solra madhiri "STARTING LA NALLA THAAN POGHUDU AANA FINISHING SARI ILAIYE!!" aana inda serial konja naal enga coll pasangala kathi poda thaan senjadhu!!!

------------- ~~~~~ Thanks to Karthik ! ~~~~~ -------------
VG said...
i've attached ur url in my article. :)

the k matter... vijay tv's sentiment. :)

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

//
i've attached ur url in my article. :)
//
Thanks!

I thought you will be commenting about Malaysia.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Karthick,

//inda serial Konjam Kadhi aanadaala thookithaanga aalavandhan.. Anda PRAJIn enbavar inda serialil irundu poana udane, directorku enna pannanumnu therila.. adhunala chennai, bombay, call center ella edathulayum suthithu velaikkavadhu nu poitaaru.. VIJAY tv problem idutaanungo!!! Vadivel solra madhiri "STARTING LA NALLA THAAN POGHUDU AANA FINISHING SARI ILAIYE!!" aana inda serial konja naal enga coll pasangala kathi poda thaan senjadhu!!!
//

I wrote this post from my memories, Exactly last year I watched this serial for around 50episodes. After that I dont know what happened.

Thanks for your infor


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
Hi friends,
do you still watch the serial?
Im living in Germany I used to see the kaathalikka neram illai serial on internet. But from the 150 th episode it stopped?
Someone seen more than that? Or know the story?
Pls respond

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------