அமர்க்களம்

எனது களமும்...தளமும்...

பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம் 11/17/2008


சமீபத்தில்-இந்த வார இறுதியில் "வாரணம் ஆயிரம்" படம் பார்க்க New Jersey போகும் போது, தற்செயலாக இந்த பாட்டை கேட்க நேர்ந்தது, சட்டென்று என் கவனத்தை ஈர்த்துக்கொண்டது அந்த பாடல், மிக அருமையான மெல்லிசை பாடல், ஒன்றிரண்டு வார்த்தைகளை தவிர அனைத்துமே சுத்த தமிழ் வார்த்தைகள். 

இந்த பாடல் எனக்கு தில் படத்தில் வரும் " உன் சமையலறையில் நான் உப்பா சர்க்கரையா?" என்ற பாடலை எனக்கு நினைவூட்ட தவறவில்லை..

பாடல் இடம் பெற்ற படம்: பொறி
பாடியவர்கள் : மது பாலகிருஷ்ணன், மதுஸ்ரீ
இசை : தீனா

இதோ அந்த பாடல் வரிகளுடன் :

ஆண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்:
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்:
ஆள் இல்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்:
ஹ்ம்ம்
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்:
பயணத்தில் வருகிற சிறு தூக்கம்
பருவத்தில் முளைக்கிற முதல் கூச்சம்

பெண்:
பரீட்சைக்கு படிக்கிற அதிகாலை
கழுத்தினில் விழுந்துடும் முதல் மாலை

ஆண்:
புகைப்படம்  எடுக்கையில் திணறும் புன்னகை அன்பே அன்பே நீ தானே
அடை மழை நேரத்தில பருகிம் தேநீர் அன்பே அன்பே நீ தானே

பெண்:
ஹ்ம்ம்
தினமும் காலையில் எனது வாசலில் இருக்கும் நாளிதழ் நீ தானே

ஆண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்:
தாய் மடி தருகிற அரவணைப்பு
உறங்கிடும் குழந்தையின் குறுஞ்சிரிப்பு

பெண்:
தேய்பிறை போல் படும் நகக்கணுக்கள்
வகுப்பறை மேஜையில் இடும் கிறுக்கல்

ஆண்:
செல்-போன் சினுங்கிட குவிகிற கவனம் அன்பே அன்பே நீ தானே
பிடித்தவர் தருகிற பரிசு பொருளும் நீ தானே

பெண்:
ஹ்ம்ம்
எழுதும் கவிதையில் எழுத்து பிழைகளை ரசிக்கும் வாசகன் நீ தானே

ஆண்:
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

பெண்:
ஹ..ஹா.ஹா..
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

ஆண்:
விடுமுறை நாட்களில் பள்ளிக்கூடம்
விளையாட்டு பிள்ளைகளின் செல்ல கோபம்

பெண்:
ஆள் இல்லா நள்ளிரவில் கேட்கும் பாடல்
அன்பே அன்பே நீயே

ஆண்:
ஹ..ஹா.ஹா..
பேருந்தில் நீ எனக்கு ஜன்னல் ஓரம்
பின் வாசல் முற்றத்திலே துளசி மாடம்

8 பின்னூட்டங்கள்:

VG said...
its my favourite song u know... :) yen tidirnu inta paadal mel oru eerpu?

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Oh really :).. It is nice to hear that you also liked this song.

I dont know somehow I am attracted to this song. For the past three days, I am humming this song always :)...


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
VG said...
ooh okey... :)) nalla tamil words konde tamil song..

------------- ~~~~~ Thanks to VG ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

yes.. you are right. apart from that, Most of us come across with these tiny experience.. ( early morning exam prep..sleeping while travelling..tea during rain like that...). as a whole I like it very much.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
i know....after a long time...in tamil cinema...pure tamil song...hey you know in vettaiyaadu vilayadu also there s some pure tamil songs

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Yes. you are right, particularly i like the Partha muthal naale song( a wonderful song), but unfortunately i dont like the picturization of that song.

Hey, I came thr' blog, it seems you belongs to our south tn, I studied in MEPCO( enna koduma karthick idhu!) thats why i am asking ..


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------
Anonymous said...
alavandhan Sir,

"Un samayal arai" padal idam petra padam "Dhil" not "Dhool"

------------- ~~~~~ Thanks to Anonymous ! ~~~~~ -------------
ஆளவந்தான் said...

Vezhavandan ,

Thanks for your correction! Good catch.

Since Actor/Director/Musician/Genre all are same, I put wrong movie name. I will correct it.


------------- ~~~~~ Thanks to ஆளவந்தான் ! ~~~~~ -------------